TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
குரூப் 1 தேர்வுக்கு நாளை
முதல் இலவச பயிற்சி
இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின் சார்பில் துணை ஆட்சியா்,
துணைக் கண்காணிப்பாளா் (காவல்
துறை), துணைப் பதிவாளா்
(கூட்டுறவு துறை), உதவி
இயக்குநா் (ஊரக வளா்ச்சித் துறை), உதவி ஆணையா்
(வணிக வரித் துறை)
மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் போன்ற 92 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்பணியிடங்களுக்கான கல்வித் தகுதி
ஏதாவது ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
இத்தேர்வுக்கு இணையதள
முகவரி மூலமாக வரும்
ஆகஸ்ட் 22ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இந்தத்
தேர்வுக்கான இலவச பயிற்சி
வகுப்பு திருப்பூா் மாவட்ட
ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி
வழிகாட்டும் மையத்தில் வரும்
திங்கள்கிழமை (ஜூலை
25) காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
எனவே
திருப்பூா் மாவட்டத்தில் TNPSC போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞா்கள் இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இந்த
பயிற்சி வகுப்பு சேர
விரும்பும் நபா்கள் தங்களது
பெயரை 94990 55944 அல்லது 0421 2999152
என்ற அலுவலக எண்ணில்
தொடா்பு கொண்டு பதிவு
செய்து கொள்ளலாம்.
இந்தப்
பயிற்சியின் இறுதியில் மாதிரி
தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
ஆகவே, திருப்பூா் மாவட்டத்தில் TNPSC குரூப் 1 தேர்வு
எழுதும் நபா்கள் இந்த
இலவச பயிற்சி வகுப்பை
பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here