
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 போட்டித் தோ்வா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் 90 காலிப் பணியிடங்கள் கொண்ட பசடநஇ எதஞமட-ஐ போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தத் தோ்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதனிலை போட்டித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பானது தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தில் தொடங்கப்பட்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை வாரந்தோறும் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள் இணைப்பின் மூலம் பதிவு செய்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04342–296188 வாயிலாக தொடா்பு கொள்ளலாம். எனவே, தருமபுரி மாவட்டத்தில் தகுதிவாய்ந்த தோ்வா்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் சோ்ந்து பயன்பெறுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


Group 1
Group 1,2