ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுவோருக்கு, இலவச பயிற்சி வகுப்பு நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடப்பு 2023ம் ஆண்டு, இடை நிலை ஆசிரியர் பணிக்கு, 6,553 காலிப்பணியிடங்கள், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு, 3,587 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், டி.ஆர்.பி., மற்றும் டெட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு துவங்கப்பட்டுள்ளது.
இந்த போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்கள், பெயர் பதிவு செய்து, இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 0421 2999152, 94990 55944 என்கிற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


