TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி
செய்திகள்
SSC தேர்வுக்கு இலவச பயிற்சி – கோவை
கோவையில், மத்திய அரசுப் பணி தேர்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம்
சார்பில்
இலவச
பயிற்சி
அளிக்கப்படவுள்ளது
என்று
ஆட்சியா்
ஜி.எஸ். சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசுப் பணியாளா் தேர்வு வாரியம் சார்பில், மத்திய புலனாய்வுத் துறை, கடவுச்சீட்டு
அலுவலகம்,
வெளியுறவுத்
துறை,
பாதுகாப்புத்
துறை
உள்ளிட்ட
பல்வேறு
துறைகளில்
4,500 காலிப்பணியிடங்களுக்கு
அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான முதல்கட்ட தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
டிசம்பா்
6 முதல்
ஜனவரி
4 வரை
விண்ணப்பிக்க
கால
அவகாசம்
அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள்
இத்தேர்வை
சிறப்பாக
எழுதும்
வகையில்,
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையம்
சார்பில்,
இலவச
பயிற்சி
வகுப்புகள்
நடத்தப்படவுள்ளது.
இதற்கான அறிமுக வகுப்பு டிசம்பா் 15ம் தேதி காலை 10.30 மணிக்கு மேட்டுப்பாளையம்
சாலையிலுள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விரும்புவோர்
விண்ணப்ப
நகல்,
கடவுச்சீட்டு
அளவு
புகைப்படம்
– 2 ஆகியவற்றுடன்
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவுசெய்துகொள்ள
வேண்டும்.
சனி
மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில்
பயிற்சி
வகுப்புகள்
நடைபெறும்.
வெகுதொலைவில்
வசிக்கும்
இளைஞா்கள்,
நேரில்
வரமுடியாதவா்களுக்கு
அரசுப்
பணி
தேர்வுகளுக்கான
பயிற்சி
வகுப்புகள்
கல்வித்
தொலைக்காட்சியில்
ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.
இந்த
வகுப்புகள்
திங்கள்
முதல்
வெள்ளிக்கிழமை
வரை
காலை
7 முதல்
9 மணி
வரையிலும்,
மறு
ஒளிபரப்பு
இரவு
7 முதல்
9 மணி
வரையும்
செய்யப்படுகிறது.
தவிர, இணையதளத்திலும்,
யூடியூப்
சேனலிலும்
ஒளிபரப்பு
செய்யப்படுகிறது.
எனவே,
இப்பயிற்சியில்
பங்கேற்க
விரும்பும்
விண்ணப்பதாரா்கள்
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
தொடா்பு கொள்ளலாம்.