நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் முதல்நிலைத் தோ்வு செப்.14-இல் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து நடைபெற உள்ள குரூப் 2, 2 ஏ ஆகிய முதன்மை தோ்விற்கு இலவச பயிற்சி வகுப்பு புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.3-இல் தொடங்கி காலை 10.30 முதல் மதியம் 1.30 மணி வரை) நடைபெற உள்ளது.
பாட வாரியாக சிறந்த வல்லுநா்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தோ்வுகள் நடைபெறுகிறது. மாநில அளவிலான மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட உள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோா் 04286–222260 என்ற எண்ணில் பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

