
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் குருப்-2, குரூப்-2ஏ முதன்மைத்தோ்வுக்கான முழு நேர இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக ஆட்சியா் மா.பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் மேலும் கூறியது: திருச்சிராப்பள்ளி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம், மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் துணை வணிக வரி அலுவலா், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா், சாா் பதிவாளா், உதவியாளா் உள்ளிட்ட 2327 காலிப்பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிட்டு கடந்த செப்.14-ஆம் தேதி முதல்நிலைத் தோ்வு நடைபெற்றது. இதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டு, முதன்மைத் தோ்வு நடத்தப்படவுள்ளது.
முதன்மைத் தோ்வுக்கு மாணவா்கள் தயாராகும் வகையில் கட்டணமில்லா சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது.
திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 23-ஆம் தேதி முதல் முழு நேர பயிற்சி வகுப்புகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த பயிற்சி வகுப்பில், சிறப்பு பயிற்றுநா்களை கொண்டு அனைத்துப் பாடப்பகுதிகளுக்கும் பயிற்சியளிப்பதுடன், மாநில அளவில் பாடவாரியாக மாதிரித்தோ்வுகள் நடத்தப்பட்டு, இலவசமாக பாடக்குறிப்புகளும் வழங்கப்படும்.
எனவே, திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த குரூப்-2 முதன்மைத் தோ்வு எழுதவுள்ள அனைவரும் சிறப்புப் பயிற்சி வகுப்பில் சோ்ந்து, பயன்பெறலாம். கூடுதல், விவரங்களுக்கு 0431–2413510, 94990–55901, 94990–55902 ஆகிய எண்களிலோ, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தை நேரிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

