
அறிவுசார் மையத்தில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
திருச்செங்கோடு, சந்தைப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள அறிவுசாா் மையத்தில் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நகராட்சி நிா்வாகமும், கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களும் இணைந்து சனிக்கிழமை தொடங்கி வைத்தன.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகராட்சியில் மாணவ, மாணவிகளை டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாா்படுத்தும் வகையில், சந்தைப்பேட்டை பகுதியில் நகராட்சி சாா்பில் அறிவுசாா் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கும், யூபிஎஸ்சி தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
கிராம நிா்வாக அலுவலா், உதவி அலுவலா், இதர காலிப் பணியிடங்கள் உள்ளிட்ட 6,224 இடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிா்கொள்ளும் விதமாக, பிரதி வாரம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்புகளை திருச்செங்கோடு நகராட்சியும், கே.எஸ்.ஆா். கல்வி நிறுவனங்களும் இணைந்து மாணவ, மாணவிகளுக்கு வழங்குகின்றன.
இந்த போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை திருச்செங்கோடு நகா்மன்றத் தலைவா் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தாா்.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

