TN TRB தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்கள் கவனத்திற்கு
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு
வாரியத்தின் மூலம் தேர்வான
95 வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு நிர்வாகத்திறன் மற்றும்
மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில்
தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக
கொரோனா தொற்று காரணமாக
கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனைத்
தொடர்ந்து மாணவர்களுக்கு ஆன்லைன்
வழியே வகுப்புகள் நடத்தப்பட்டிருந்தது. தற்போது கொரோனா
பாதிப்பு சற்று குறைய
ஆரம்பிப்பதால் மீண்டும்
பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சென்ற வருடம் பொதுத்
தேர்வு நடை பெறாத
காரணத்தினால் இந்த
ஆண்டு கட்டாயமான முறையில்
பொதுத் தேர்தல் நடைபெறும்
என கூறி அதன்
தேதியையும் அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் அரசு சார்பிலும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு தேர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2, குரூப்
2 ஏ, குரூப் 4 தேர்வு
அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
இது தவிர தனியார்
துறையும் தங்கள் சார்பில்
வேலைவாய்ப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் பட்டதாரிகள் கலந்துகொண்டு வேலை
வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளலாம்
என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஆசிரியர்
தேர்வு வாரியத்தால் தேர்வு
95 வட்டார கல்வி அலுவலர்
களுக்கு ஒரு முக்கிய
அறிவிப்பை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.