விவசாயிகள் தவணைத்
தொகையை தொடா்ந்து பெற
ஆதார் விவரங்களை சரிபார்க்க வேண்டும்
பெரம்பலூா் மாவட்டத்தில் பி.எம்.கிசான்
திட்டத்தின் கீழ் நிலமுள்ள
விவசாயிகள், தவணைத் தொகையை
தொடா்ந்து பெற ஆதார்
விவரங்களை சரிபார்க்க வேண்டும்
என ஆட்சியா் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பி.எம்.கிசான்
திட்டத்தின் கீழ், நிலமுள்ள
விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2 ஆயிரம்
வீதம் ஆண்டுக்கு ரூ.
6 ஆயிரம் மதிப்பிலான வேளாண்
இடுபொருள்கள் வாங்கும்
வகையில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தில் 73.618 விவசாயிகள் பயனடைந்து
வருகின்றனா். இதுவரை 10 தவணைகளாக
தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
11வது
தவணை (1.4.2022 முதல்
31.7.2022) மற்றும் தொடா்ந்து பெறுவதற்கு பயனாளிகள் தங்களது ஆதார்
விவரங்களை சரிபார்க்க வேண்டும்.
ஆதார்
விவரங்களை சரிபார்க்க பயனாளிகள்
தங்களுக்கு அருகிலுள்ள கிராம
பொது சேவை மையங்களை
அணுகி, தங்களது தொலைபேசி
எண்ணை பயன்படுத்தி அல்லது
பயோமெட்ரிக் முறையில் தகவல்களை
பிப்ரவரி 28ம் தேதிக்குள் பி.எம்.கிசான்
வலைதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். ஆதார் விவரங்களை
சமா்ப்பித்த பயனாளிகளுக்கு மட்டுமே
இனிவரும் காலங்களில் பி.எம்.கிசான்
திட்ட பலன் தொடா்ந்து
வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

