வேளாண் பட்டதாரிகளுக்கு மானியம் விண்ணப்பிக்க காலக்கெடு
நீட்டிப்பு
வேளாண்
பட்டதாரிகளுக்கான மானிய
திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,
வரும் ஜூன் மாதம்
30ம் தேதி வரை
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தட்டாஞ்சாவடி கூடுதல் வேளாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தட்டாஞ்சாவடி பயிற்சி வழித் தொடர்பு
திட்டம் அலுவலகம் மூலமாக,
வேலையில்லா விவசாய பட்டதாரிகள், விவசாயிகள் சான்றிதழ் பயிற்சி
முடித்தவர்கள், வேளாண்
சுய தொழில் மற்றும்
வேளாண் தொழில்நுட்ப ஆலோசனை
நிலையம் துவங்குவதை ஊக்குவிக்க மானியம் வழங்கப்படு கிறது.இதன்படி,
வேளாண் பட்டதாரிகளுக்கு 3 லட்சம்
ரூபாய், சான்றிதழ் பயிற்சி
முடித்தவர்களுக்கு 75 ஆயிரம்
ரூபாய் மானியம் வழங்கும்
திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் பயனடைய விரும்பு வோர்
https://agri.py.gov.in/gap.html என்ற
இணையதளத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து,
விரிவான திட்ட அறிக்கைகளுடன் இன்று 6ம் தேதிக்குள் சமர்ப்பிக்க முன்பு காலக்கெடு
விதிக்கப்பட்டு இருந்தது.இந்த
காலக்கெடு ஜூன் 30ம்
தேதி வரை தற்போது
நீட்டிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் ஆர்வ
முள்ள தகுதியான விண்ணப்பதாரர்கள், விண் ணப்
பங்களை தட்டாஞ்சாவடி கூடுதல்
வேளாண் இயக்குனர் பயிற்சி
வழித் தொடர்பு திட்ட
அலுவல கத்தை அணுகி
பெற்று கொள்ளலாம்.