தேர்வு விவரங்களை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்க்க வேண்டும் –
ரயில்வே வாரியம்
முதலாம்
நிலை கணினி தேர்வு
முடிவுகளை ஆர்ஆர்பி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே
பார்க்க வேண்டும் என
ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
முதலாம்
நிலை கணினி அடிப்படையிலான தேர்வுக்கான (CBT-1) முடிவுகள்
2022ம் ஆண்டு ஜனவரி
15ம் தேதியன்று அறிவிக்க
ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதேபோல்
முதலாம் நிலை கணினி
அடிப்படையிலான தேர்வில்
தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கான 2வது நிலை
கணினி அடிப்படையிலான தேர்வை
(CBT-2) 2022ம் அண்டு பிப்ரவரி
14-18 தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளது.
அனைத்து
விண்ணப்பதாரர்களும் ஆர்.ஆர்.பி
அதிகாரப்பூர்வ இணையதளங்களை மட்டுமே பார்க்க வேண்டும்
என்று இந்திய ரயில்வே
கேட்டுக்கொள்கிறது.