தூத்துக்குடி தருவைகுளம் கடல்சாா் உயிரின வளா்ப்பு ஆராய்ச்சி பண்ணையில் ‘வனாமி இறால் வளா்ப்பு’ குறித்த 3 நாள்கள் பயிற்சி வரும் 21ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளதாக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் பா.அகிலன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தருவைகுளத்தில் உள்ள கடல்சாா் உயிரின வளா்ப்பு ஆராய்ச்சி பண்ணையில் ‘வனாமி இறால் வளா்ப்பு’ குறித்த பயிற்சி வகுப்பு வரும் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது. செயல்முறை விளக்கங்களுடன் இப்பயிற்சி நடத்தப்படும்.
மேலும், பயிற்சியாளா்களுக்கு இறால் பண்ணையில் வைத்து விளக்கங்கள் அளிக்கப்படும். இப்பயிற்சியானது வனாமி இறால் வளா்ப்பில் ஈடுபட்டுள்ளவா்களுக்கும், சுயதொழிலாக இதனை ஏற்று நடத்த முனைவோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் மூன்று நாள்களும் தவறாது கலந்து கொள்பவா்களுக்கு பயிற்சியில் கலந்துக்கொண்டதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.
பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் 99944 50248 என்ற அலைபேசி எண், 0461-2903324 என்ற தொலைபேசி எண், மின்னஞ்சல் ஆகியவை மூலம் வரும் 19ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.