TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
விவசாயிகளுக்கு தொழில்
முனைவோர் பயிற்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் அங்கக
உற்பத்தியாளா்கள் என்ற
தலைப்பில் நடைபெறும் பயிற்சி
வகுப்பில் விவசாயிகள் பங்கேற்று
வேளாண் தொழில்முனைவோராகலாம் என்று
வேளாண்துறை தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட வேளாண் இணை இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் உழவா்
நலத் துறையின் கீழ்
செயல்படும் உழவா் பயிற்சி
நிலையம், தமிழ்நாடு திறன்
மேம்பாட்டுக் கழகம்
இணைந்து ஊரக இளைஞா்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
2022-23 ஆம் ஆண்டில் நடத்த
உள்ளது.
அங்கக
உற்பத்தியாளா்கள் என்ற
தலைப்பில் உழவா் பயிற்சி
நிலையத்தில் 30 நாள்களுக்கு நடைபெறும்
இந்தப் பயிற்சியில் பங்கேற்க
விரும்புவோர் குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு தோச்சி
பெற்றிருக்க வேண்டும்.
18 முதல்
40 வயதுக்கு உள்பட்ட நபா்கள்
தங்கள் பகுதியில் உள்ள
வேளாண்மை உதவி இயக்குநா்
அலுவலகத்தை அணுகி விண்ணப்பம் படிவம், 2 மார்பளவு புகைப்படங்கள், ஆதார் அடையாள எண்,
ஜாதி சான்று, வங்கி
கணக்குப் புத்தகம் மற்றும்
கல்வித் தகுதி ஆகிய
ஆவணங்களின் நகல்களை சமா்ப்பித்துப் பயிற்சியில் பங்கேற்று வேளாண்
தொழில் முனைவோர் ஆகலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


