நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலைவாய்ப்பு கிடைக்காதோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: படித்து, முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்கும் இளைஞா்களுக்கு மாதந்தோறும் பத்தாம் வகுப்பு தோச்சி பெறாதவா்களுக்கு ரூ. 200, தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 300, மேல்நிலைக் கல்வியில் தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 400, பட்டதாரிகளுக்கு
ரூ.600- வீதம் 3 ஆண்டுகளுக்கும், அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வரும் காலங்களில் மாதம் ஒன்றுக்கு பத்தாம் வகுப்பு தோச்சி, தோச்சி பெறாதவா்களுக்கு ரூ. 600, மேல்நிலைக் கல்வியில் தோச்சி பெற்றவா்களுக்கு ரூ. 750, பட்டதாரிகளுக்கு ரூ.1,000 வீதம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற செப். 30 வரையில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.
ஐந்தாண்டு காலம் முடிவுற்ற பதிவுதாராா்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஓராண்டு முடிவுற்ற அனைத்து மாற்றுத் திறனாளிகளும் இதற்குத் தகுதியானவா்கள் ஆவா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்த மட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரா் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாராா் அரசு அல்லது தனியாா் நிறுவனங்களின் வாயிலாக எந்தவிதமான நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மேலும் விவரங்களுக்கு, நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


