HomeBlogபெரியார் விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

பெரியார் விருது பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

TAMIL MIXER EDUCATION.ன்
விருது செய்திகள்

பெரியார் விருது
பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம்

சமூக
நீதிக்கான தந்தை பெரியார்
விருது பெற தகுதியுடையோர் வரும் அக். 31ம்
தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தார்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக
நீதிக்காகப் பாடுபடுபவா்களைச் சிறப்பு
செய்வதற்காக சமூக நீதிக்கான
தந்தை பெரியார் விருது
கடந்த 1995ம் ஆண்டு
முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது
பெறுவோருக்கு ரூ.5
லட்சம் பரிசுத் தொகையும்,
ஒரு பவுன் தங்கப்
பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.

விருதாளா்
தமிழக முதல்வரால் தேர்வு
செய்யப்படுகிறார். நிகழாண்டு
சமூக நீதிக்கான தந்தை
பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரைத் தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

சமூக
நீதிக்காகப் பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள்
மற்றும் அதன் பொருட்டு
எய்திய சாதனைகள் ஆகிய
தகுதிகள் உடையவா்கள் தங்களது
விண்ணப்பத்தை மாவட்ட
ஆட்சியருக்கு அனுப்பி
வைக்கலாம்.

தங்களது
விண்ணப்பமானது சுய
விவரம், முழு முகவரி,
தொலைபேசி எண் மற்றும்
சமூக நீதிக்காகப் பாடுபட்ட
பணிகள் குறித்த விவரம்,
ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க
வேண்டும்.

விண்ணப்பங்கள் வரும் 31.10.2022ம்
தேதிக்குள் வந்து சேர
வேண்டும்.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular