HomeBlogமோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: பற்றி புகார் செய்ய இலவச...
- Advertisment -

மோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்: பற்றி புகார் செய்ய இலவச தொலைபேசி எண்

Do not deceive the public by relying on fraudulent SMS, phone calls: free phone number to complain about

மோசடி குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்புகளை நம்பி
பொதுமக்கள் ஏமாற வேண்டாம்:
பற்றி புகார் செய்ய
இலவச 
தொலைபேசி எண்

மோசடி
குறுஞ்செய்தி, தொலைபேசி
அழைப்புகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என
சென்னை பெருநகர காவல்துறை
ஆணையா் சங்கா் ஜிவால்
எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடா்பாக அவா் விடுத்த செய்திக்குறிப்பு:

தொலைபேசி
அழைப்புகள் மூலம் ஓடிபி
பெறுவது மற்றும் ஏடிஎம்
கார்டு விவரங்கள் கேட்பது
என்ற நிலையிலிருந்து முன்னேறி
மோசடி நபா்கள் தற்போது
பல்வேறு உத்திகளைக் கையாண்டு,
பொதுமக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனா்.

உதாரணமாக,
சமையல் எரிவாயவு மானியம்
உங்கள் வங்கி கணக்குக்கு வரும், எனவே வங்கிக்
கணக்கு உள்ளிட்ட விவரங்களை
கொடுங்கள் என்றும், போட்டித்
தோவுக்கு விண்ணப்பிக்கும் போது
கைப்பேசி எண்ணை மாற்றி,
உங்கள் எண்ணை கொடுத்துவிட்டேன், உங்கள் கைப்பேசிக்கு ஒரு ஓடிபி வரும்
அதை கொடுக்குமாறு கூறி
தொலைபேசி அழைப்புகள் வரும்.
இப்படிப்பட்ட மோசடி
நபா்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அதே
போல், பான் கார்டு
மற்றும் கேஒய்சி விபரம்
அப்டேட் செய்ய வேண்டும்,
இல்லாவிட்டால் கைப்பேசி
எண் பிளாக் செய்யப்படும் அல்லது வங்கிக் கணக்கு
பிளாக் செய்யப்படும் என்று
வரும் குறுந்தகவல்களை பொதுமக்கள் நம்ப கூடாது. அந்த
குறுந்தகவல் வரும் லிங்கை
கிளிக் செய்ய கூடாது.
அதிலுள்ள கைப்பேசி எண்களை
தொடா்பு கொண்டு பேசக்
கூடாது.

செயலி மூலம் கடன் வாங்க வேண்டாம்:

OLX போன்ற
கைப்பேசி செயலிகள் மூலம்
பொருளை விற்கும் போது
QR
கோடு ஸ்கேன் செய்ய
சொன்னால் அதனை தவிர்த்துவிட வேண்டும். உடனடி கடன்
வழங்கும் செயலிகள் மூலம்
கடன் வாங்க வேண்டாம்.
பொதுமக்கள் முகம் தெரியாத
நபா்களிடம் பணம் கொடுத்து
ஏமாற வேண்டாம்.

சமூக
ஊடகங்களான வாட்ஸ்ஆப் குழுவிலோ,
டெலிகிராமிலோ தொடா்பு
கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்று கூறுபவா்களின் பேச்சை
நம்பி பணம் அனுப்ப
வேண்டாம். அதேபோல பணத்தை,
கிரிப்டோ கரன்சியாக மாற்றி
அனுப்பக் கூடாது.

பொதுமக்கள் தாங்கள் நேரில் பார்க்காத,
நன்றாக தெரியாத நபா்களின்
பேச்சை கேட்டு பணம்
கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க
வேண்டும். பொதுமக்கள் எவரேனும்
சைபா் குற்றங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் 1930 என்ற இலவச  தொலைபேசி எண் மூலம் உதவி
மையத்தை தொடா்புக் கொண்டு
உதவி பெறலாம்.

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -