அலங்கார மலர்
செய்யும் ஓரிகாமி பயிற்சி
இந்து
தமிழ் திசை நாளிதழ்,
பெருந்துறை நிவேதா கலை,
கைவினைக் கழகம் இணைந்து
நடத்தும் அலங்காரப் பூக்கள்
செய்யும் ஓரிகாமி ஆன்லைன்
பயிலரங்கம் வரும் 20ம்
தேதி முதல் 3 நாட்கள்
நடைபெற உள்ளது.
கோடை
விடுமுறையில் வீட்டில்இருக்கும் பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு பயனளிக்கும் விதமாக, ‘இந்து தமிழ்
திசை‘ நாளிதழ் பல்வேறு
செயல்பாடுகளை இணைய
வழியாக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு
பகுதியாக, பூக்கள் செய்யும்
ஓரிகாமி ஆன்லைன் பயிலரங்கு
3 நாட்கள் நடத்தப்படுகிறது.
வரும்
20, 21, 22ம் தேதிகளில் தினமும்
மாலை 6 மணிமுதல் 7 மணி
வரை இந்த பயிலரங்கு
நடக்க உள்ளது. 3ம்
வகுப்பு முதல், பள்ளிகளில் படிக்கும் அனைத்து குழந்தைகளும் இதில் பங்கேற்கலாம்.
இப்பயிலரங்கில் 10-க்கும் மேற்பட்ட கைவினைப்
பணிகள் கற்றுத்தரப்பட உள்ளன.
உள்அலங்காரங்கள் செய்ய
இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பயிற்சியில் பங்கேற்கும்போது, போதுமான இடவசதியுடன், நல்ல
வெளிச்சம் உள்ள மேஜையில்
அமர்ந்திருக்க வேண்டியது
அவசியம்.
இதில்
பங்கேற்க விரும்புவோர் https://www.htamil.org/00547 என்ற
லிங்க்கில் ரூ.353 பதிவுக்
கட்டணம் செலுத்தி, பதிவு
செய்துகொண்டு பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 8248751369
என்றசெல்பேசி எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.