சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை ஒப்பந்த பணியாளர்கள் மூலம்
நிரப்ப முடிவு – 7,296 Vacancies
தமிழகம்
முழுவதும் உள்ள சுகாதார
நிலையங்களில் காலியாக
உள்ள பணியிடங்களை ஒப்பந்த
பணியாளர்கள் மூலம் நிரப்ப
மக்கள் நல்வாழ்வு துறை
முடிவு செய்துள்ளது.
அதன்படி,
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசு
(TN Govt) துணை சுகாதார நிலையம்
மற்றும் நலவாழ்வு மையங்களில் பணியாற்ற இடைநிலை சுகாதார
பணியாளர்கள் மற்றும் பல்நோக்கு
சுகாதார பணியாளர்கள் தேவை
என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தமிழகம் முழுவதும் 2448 துணை
பல்நோக்கு சுகாதார ஆய்வாளர்கள், 4848 இடைநிலை சுகாதார
பணியாளர்களை மாவட்ட சுகாதார
துறை மூலமாக தேர்வு
செய்து பணியமர்த்த தமிழ்நாடு
அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த
பணியிடத்திற்கு ஆண்கள்
மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்
என்று தெரிவித்துள்ளது. கொரோனா
காலத்தில் வேலை செய்தவர்களுக்கு இதில் கூடுதல் மதிப்பெண்
வழங்கப்படும் என்றும்
மருத்துவ மற்றும் மக்கள்
நல்வாழ்வு துறை தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர் https://nhm.tn.gov.in என்ற
இணையதளத்தில் வருகின்ற
15ஆம் தேதி வரை
விண்ணப்பிக்கலாம் என்று
சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.