தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம்–CBSE
CBSE
பொதுத்தேர்வு எழுதும்
தனித்தேர்வர்கள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி
விண்ணப்பங்கள் சமர்பிக்க
பிப்ரவரி 25 கடைசி தேதியாக
அறிவிக்கப்பட்டுள்ளது.
CORONA காரணமாக மாணவர்கள் ஆன்லைன்
மூலமாக பாடங்களை கற்று
வருகின்றனர். பொதுத்தேர்வு காரணமாக
10 மற்றும் 12 ஆம் வகுப்பு
மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர்
CBSE பொதுத்தேர்வு அட்டவணையை
வெளியிட்டார். அதன்படி
மே 4 முதல் ஜூன்
10 வரை CBSE பொதுத்தேர்வு நடைபெறும்.
மாணவர்களின் பொதுத்தேர்வு சுமையை
குறைக்க மத்திய அரசு
பாடத்திட்டத்தில் 40% பாடங்களை
குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. தற்போது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்க கால
அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைன்
மூலமாக தனித்தேர்வு எழுதும்
மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
2021ஆம்
ஆண்டு தனித்தேர்வு எழுதும்
மாணவர்களுக்கு பல
சிக்கல்கள் உள்ளதால் கால
அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. CBSE பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் பிப்ரவரி
22 முதல் பிப்ரவரி 25 வரை
விண்ணப்பிக்கலாம் எனவும்
விண்ணப்பிக்கும் போது
விண்ணப்பக் கட்டணத்துடன், தாமதக்கட்டணத்தையும் சேர்த்து செலுத்த
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


