TAMIL MIXER EDUCATION.ன்
கல்லூரி செய்திகள்
அரவக்குறிச்சி அரசுக்
கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலந்தாய்வு
இதுகுறித்து கல்லூரி முதல்வா் சுதா வெளியிட்டுள்ள அறிக்கை:
கரூா்
மாவட்டம், அரவக்குறிச்சி அரசுக்
கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் 2022-2023ம்
ஆண்டுக்கான மாணவா் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 8ம்
தேதி தொடங்கி 16ம்
தேதி வரை நடைபெறுகிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்பவா்கள் தங்கள்
மாற்றுச் சான்றிதழ், 10, 11 மற்றும்
12ஆம் வகுப்பு மதிப்பெண்
சான்றிதழ்கள், ஜாதி
சான்றிதழ், ஆதார் அட்டை,
வங்கிக் கணக்கு புத்தகம்
ஆகியவற்றின் அசல் மற்றும்
5 நகல்கள், 5 நிழற்படங்கள், இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்ப
படிவம் மற்றும் அதன்
இரண்டு நகல்களை கொண்டுவர
வேண்டும்.
மேலும்
பெற்றோர்களை தவறாமல் அழைத்து வர வேண்டும்.
கலந்தாய்வில் கலந்துகொண்டு தேர்வு பெற்றவா்கள் சேர்க்கைக்
கட்டணத்தை
அன்றே
கல்லூரி
அலுவலகத்தில் செலுத்த
வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


