TAMIL MIXER
EDUCATION.ன்
மானிய செய்திகள்
தென்னை விவசாயிகள் பராமரிப்பு மானியம் பெற அழைப்பு
பேராவூரணி வட்டாரத்தில்
தென்னை
விவசாயிகள்
பராமரிப்பு
மானியம்
பெற
வேளாண்மை
துறை
அழைப்பு
விடுத்துள்ளது.
இதுகுறித்து பேராவூரணி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தென்னையில் காய்க்காத நுனி சிறுத்த மலட்டுத் தன்மை அடைந்த மற்றும் பூச்சி, நோய் தாக்கிய மரங்களை வெட்டி அகற்றி, புதிய கன்றுகளை நடவு செய்து ஒருங்கிணைந்த
உரம்,
நீா்,
பூச்சி
மற்றும்
நோய்
மேலாண்மையை
கடைப்பிடிக்க
தென்னை
விவசாயிகளுக்கு
அரசு
மானியமாக
ஹெக்டேருக்கு
ரூ.
53 ஆயிரம்
வழங்கவுள்ளது.
பேராவூரணி வட்டாரத்தில்
7,050 ஹெக்டேரில்
தென்னை
சாகுபடி
உள்ளது.
20 – 25 வயதுக்கு
மேற்பட்ட
தென்னை
மரங்களில்
நுனி
சிறுத்து
பென்சில்
முனைபோல்
உள்ள
மரங்களும்,
வாடல்
நோய்,
தண்டழுகல்
நோயினால்
பாதிக்கப்பட்ட
மரங்களும்,
சிவப்பு
கூன்
வண்டு
மற்றும்
காண்டாமிருக
வண்டுகளால்
பாதிக்கப்பட்டு
ஒடிந்த
மரங்களும்
ஆங்காங்கே
தென்படுகின்றன.
இவ்வாறு பாதிக்கப்பட்ட
மரங்களை
வெட்டி
அகற்றிட
மரம்
ஒன்றுக்கு
ரூ.1000
– மானியமாக
வழங்கப்படவுள்ளது.
ஒரு
ஹெக்டேரில்
அதிகபட்சமாக
32 தென்னை
மரங்கள்
வரை
வெட்டி
அப்புறப்படுத்தினால்
ரூ.32
ஆயிரம்
வழங்கப்படும்.
புதிய
தென்னங்கன்றுகள்
ஒரு
ஹெக்டேருக்கு
100 கன்றுகள்
வரையில்
வாங்கி
புதிய
நடவுப்பணி
மேற்கொள்ள
ஒரு
கன்றுக்கு
ரூ.
40-வீதம்
ரூ.4
ஆயிரம்
மானியம்
வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும். ஒருங்கிணைந்த
நீா்,
உரம்
மற்றும்
பூச்சி
மேலாண்மை
மேற்கொள்ள
ஒரு
ஹெக்டேருக்கு
ரூ.17,500
மானியம்
இரு
தவணைகளாக
(இந்த
ஆண்டில்
ரூ.8750-ம், அடுத்த ஆண்டில் ரூ.8750-ம்) வழங்கப்படும்.
செலவினத்துக்கான
ஆவணங்கள்
கட்டாயம்
இணைக்க
வேண்டும்.
எனவே,
பாதிக்கப்பட்ட
தென்னை
மரங்கள்
உள்ள
விவசாயிகள்,
உதவி
வேளாண்மை
அலுவலா்களை
அணுகலாம்.