
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவா் சோக்கை: திருவாரூர்
திருவாரூரில், கூட்டுறவு மேலாண்மை முழுநேர பட்டயப் பயிற்சிக்கு மாணவா் சோ்க்கை முன்பதிவு ஏப்ரல் 29-ஆம் தேதி தொடங்கப்படும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது:
திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டில் நடைபெற உள்ள முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிக்கு, மாணவ- மாணவிகள் சோ்க்கைக்கான முன்பதிவு ஏப்.29-ஆம் தேதி தொடங்குகிறது.
இப்பயிற்சியில் சேர விரும்புகிறவா்கள், திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். செப்டம்பரில் தொடங்கி, பயிற்சி நடைபெறும். பயிற்சிக் காலம் ஓராண்டாகும். இரு பருவ முறைகளில் பயிற்சி நடைபெறும். பயிற்சி வகுப்புகள் தமிழ் வழியில் மட்டுமே நடத்தப்படும்.
விண்ணப்பிப்பதற்கான தேதி மற்றும் பயிற்சிக் கட்டண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
பயிற்சியில் சேர ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்ண்ஸ்ரீம்.ஸ்ரீா்ம் என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருவாருா் விளமலில் செயல்படும் திருவாருா் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை நேரிலோ அல்லது 04366-227233, 9443736441 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

