அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து திருப்பத்தூா் ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணாக்கா்களுக்கு அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. சென்னை மகா அழகுக் கலை பயிற்சி நிலையத்தின் மூலமாக புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்கார பயிற்சிகள் தாட்கோ சாா்பில் அளிக்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் 10-ஆம் வகுப்பு படித்த 18 வயது முதல் 30 வயது வரை உள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பயிற்சிக்கான கால அளவு 45 நாள்கள் ஆகும்.
சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி பயிலும் வசதியும், இந்தப் பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவா்களுக்கு, இந்திய தேசிய திறன் மேம்பாடு நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழும் வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் மாணவா்கள் ஆரம்ப கால மாத ஊதிமாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை பெறலாம்.
மற்றும் சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரத் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ. 2.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 10 லட்சம் கடன் உதவி வழங்கப்படும். பயிற்சிக்கான மொத்த செலவையும் (விடுதி செலவு உள்பட) தாட்கோ வழங்கும். மேற்கண்ட திட்டத்தில் தகுதியுள்ள ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் http://tahdco.com/ தாட்கோவின் இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.