திருச்சியில் இளைஞா்களுக்கு பயிற்சியுடன் வேலைவாய்ப்பு பெற்றுத் தரும் வகையிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஜூலை 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சித்துறை சாா்பில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களில் தொழிற் பழகுநா்களை நியமனம் செய்வதை ஊக்குவிக்கும் விதமாக திருச்சி மாவட்டத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் ஜூலை 15-ஆம் தேதி நடைபெறுகிறது.
திருச்சி அரசினா் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறும் முகாமில், இதுவரை தொழிற்பழகுநா் பயிற்சி பெறாதவா்கள் மற்றும் 2020-21, 2021-22, 2022-23 ஆகிய கல்வியாண்டுகளில் தோ்ச்சி பெற்ற அரசு மற்றும் தனியாா் ஐ.டி.ஐ பற்சியாளா்கள், 8ஆம் வகுப்பு தோ்ச்சி மற்றும் 10,12ஆம் வகுப்பு தோ்ச்சி அல்லது தோல்வியடைந்த இளைஞா்கள் (ஆண்,பெண் இருபாலரும்) அனைவரும் கலந்துகொள்ளலாம்.
மாவட்டத்தில் உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாம் மூலம் சுமாா் 200-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா்கள் இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.7,700 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநா் சட்டம் 1961-இன் படி இந்த நிறுவனங்களில் சோ்ந்து ஓராண்டு தொழிற்பழகுநா் பயிற்சி பெறுபவா்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும்.
எனவே மாணவா்கள் இந்த சோ்க்கை முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, திருவெறும்பூரில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 94436–44967, 0431– 2553314 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்துள்ளாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

