10, 11ம் வகுப்பு
துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10,11,12ம்
வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து
செய்யப்பட்டது. முந்தைய
தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலில் தேர்வு முடிவுகள்
அறிவிக்கப்பட்டன. அந்த
தேர்வில் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுகள்
செப்டம்பர் 16 முதல் துவங்கி,
30ஆம் தேதி வரை
நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில்
10ஆம் வகுப்பு துணை
தேர்வு செப்டம்பர் மாதம்
16 முதல் 28-ஆம் தேதி
வரையும், 11-ஆம் வகுப்பு
துணை தேர்வுகள் செப்டம்பர் மாதம் 15 முதல் 30 வரையும்
நடத்தப்படும். இந்த
துணைத்தேர்வு எழுதுபவர்கள், இன்று முதல் 11ஆம்
தேதி வரை அரசு
தேர்வுகள் சேவை மையங்கள்
மூலம் விண்ணப்பிக்கலாம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,
தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த
விவரங்களை www.dge.tn.gov.in
என்ற இணையதளத்தில் சென்று
தெரிந்துகொள்ளலாம்.