TAMIL MIXER
EDUCATION.ன்
திருப்பூர்
செய்திகள்
மானியத்துடன்
உணவுப்பொருள்
தயாரிப்பு
தொழில்
துவங்க
தொழில்முனைவோருக்கு
அழைப்பு
அரசு மானியத்துடன்
உணவுப்பொருள்
தயாரிப்பு
தொழில்
துவங்க
தொழில்முனைவோருக்கு
அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் உணவுப்பொருள்
பதப்படுத்தும்
குறு
நிறுவனங்களை
ஒழுங்குபடுத்தும்
திட்டம்,
மாவட்ட
தொழில்
மையம்
மூலம்
செயல்படுத்தப்படுகிறது.
பழச்சாறு, காய்கறி, பழங்களை பதப்படுத்துதல்,
அரிசி
ஆலை,
உலர்
மாவு,
இட்லி,
தோசை
மாவு,
அப்பளம்
தயாரிப்பு,
உணவு
எண்ணெய்,
மரச்செக்கு
எண்ணெய்,
கடலை
மிட்டாய்,
பேக்கரி
பொருட்கள்,
இனிப்பு,
காரவகை
திண்பண்டங்கள்,
சாம்பார்
பொடி,
இட்லி
பொடி,
ரசப்பொடி
போன்ற
மசாலா;
காப்பி
கொட்டை
அரைத்தல்,
தேன்
பதப்படுத்துதல்,
கால்நடை
தீவன
உற்பத்தி
தொழில்
துவங்கவும்,
விரிவாக்கம்
செய்தல்,
தொழில்நுட்ப
மேம்பாட்டுக்கு
உணவு
பொருள்
பதப்படுத்தும்
நிறுவனங்களை
ஒழுங்குபடுத்தும்
திட்டம்
கைகொடுக்கிறது.
உணவு பொருள் தயாரிக்கும் புதிய தொழில் துவங்கவும், மேம்படுத்துவதற்கான
தொழில்நுட்ப
ஆலோசனை,
திறன்
மேம்பாட்டு
பயிற்சி,
திட்ட
அறிக்கை
தயாரிப்பதற்கான
வழிகாட்டுதல்களும்
வழங்கப்படுகிறது.
வங்கிகள் மூலம், மானியத்துடன்
கூடிய
கடனுதவி,
சட்டரீதியான
உரிமங்கள்,
தரச்சான்றுகள்,
விற்பனை
மேம்பாட்டுக்கு
தேவையான
உதவி
செய்யப்படுகிறது.
ஒரு கோடி ரூபாய் வரை திட்ட அறிக்கை கொண்ட உணவு பதப்படுத்தும்
தொழில்
திட்டங்கள்,
உதவி
பெற
தகுதியானவை.
இந்த
திட்ட
விண்ணப்பதாரருக்கு,
18 வயது
நிரம்பியிருக்க
வேண்டும்.
மொத்த தொகையில், 10 சதவீதம் முதலீட்டாளரின்
பங்களிப்பாக
இருக்க
வேண்டும்;
மீதம்
90 சதவீதத்துக்கு
வங்கி
கடன்
பெறமுடியும்.திட்ட மதிப்பீட்டில்
35 சதவீதம்
மானியம்
வழங்கப்படும்;
அதிகபட்சம்
10 லட்சம்
ரூபாய்
வரை
மானியம்
வழங்கப்படும்.
திருப்பூர் மாவட்டத்தில்
உணவு
பொருள்
தயாரிக்கும்
நிறுவனங்கள்
துவக்கவும்,
ஏற்கனவே
செயல்பட்டுவரும்
நிறுவனங்களை
விரிவுபடுத்த
விரும்பும்
தொழில்முனைவோர்,
சுய
உதவிக்குழுக்கள்,
உழவர்
உற்பத்தியாளர்
அமைப்பினர்,
உற்பத்தியாளர்
கூட்டுறவு
சங்கங்கள்
விண்ணப்பிக்க
மாவட்ட
நிர்வாகம்
அழைப்பு
விடுத்துள்ளது.
விரும்புவோர்
www.pmfme.mofpi.gov.in என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கூடுதல்
விவரங்களுக்கு,
மாவட்ட
தொழில்
மையத்தை,
0421 247507,
95007 13022 என்கிற
எண்ணில்
தொடர்பு
கொள்ளலாம்.