TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக
செய்திகள்
பொதுப்பணி துறையில் 2 பிரிவுகள் விரைவில் இணைக்க நடவடிக்கை
பொதுப்பணி துறையில் உள்ள இரண்டு பிரிவுகளை விரைவில் இணைப்பதற்கான,
ஆரம்ப
கட்ட
பணிகள்
நடந்து
வருகின்றன.
தமிழக பொதுப்பணித் துறை வாயிலாக, மருத்துவம், வருவாய், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான
கட்டடங்கள்
கட்டப்படுகின்றன.
தலைமை செயலகம், அரசு ஊழியர்கள் குடியிருப்பு,
அமைச்சர்கள்,
நீதிபதிகள்
பங்களாக்கள்
உள்ளிட்ட
அரசு
கட்டடங்களின்
பராமரிப்பு
பணிகளும்
மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன.
இந்தப் பணிகளை மேற்கொள்ள, துறையில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு, மருத்துவ கோட்டம், மின்கோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும்,
பொதுப்பணித்துறையில்
இருந்து
நீர்வளத்துறை
தனியாக
பிரிக்கப்பட்டது.
சென்னை,
திருச்சி,
மதுரை
மண்டலங்களை
தொடர்ந்து,
கோவை
மண்டலம்
புதிதாக
உருவாக்கப்
பட்டது.
முதன்மை தலைமை பொறியாளரிடம்
இருந்த,
சென்னை
மண்டல
தலைமை
பொறியாளர்
பதவிக்கு,
தனியாக
அதிகாரி
நியமிக்கப்பட்டார்.
நிர்வாக வசதிக்காக, மருத்துவம் மற்றும் மின் கோட்டங்கள் பிரிவை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவுடன் இணைப்பதற்கான
ஆரம்பகட்ட
பணிகள்
நடந்து
வருகின்றன.
நிதித்துறை ஒப்புதல் கிடைத்ததும், இரண்டு பிரிவுகளும் ஒன்றாக இணைக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள், பொதுப்பணி துறையில் தீவிரமாக நடந்து வருகின்றன.