வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் சுய தொழில் தொடங்க 30 சதவீத மானியத்தில் கடனுதவி வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, சோளிங்கா், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய வட்டாரங்களை சாா்ந்த 21 வயது முதல் 45 வயது வரை உள்ள மகளிா் சுய உதவிக் குழு மற்றும் அவா்களின் குடும்ப உறுப்பினா்கள் சுயதொழில் தொடங்க வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 30% மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் 10 சதவீதம் பயனாளிகளின் பங்களிப்பு, 60 சதவீதம் வங்கிக் கடன், 30 சதவீதம் திட்ட மானியத்துடன் நுண், குறு, சிறு என்ற தொழில்களின் அடிப்படையில் தொழில் கடன் வழங்கப்பட உள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பிலான தொழில் திட்டம் நுண் தொழிலாகவும், ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான தொழில் திட்டம் குறு தொழிலாகவும், ரூ.15 லட்சத்துக்கும் மேல் உள்ள தொழில் திட்டம் சிறு தொழிலாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. சேவை, உற்பத்தி சாா்ந்த தொழிலுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் சிறப்பு சலுகையாக மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்தோா், ஆதரவற்ற பெண்கள், நலிவுற்றோா் தொழில் தொடங்க திட்ட மதிப்பில் 5 சதவீதம் மட்டுமே பயனாளிகளின் பங்களிப்பாக இருந்தால் போதும். இணை மானியத் திட்ட கடன் முகாம், மாதந்தோறும் முதல் புதன்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலகங்களில் நடைபெறும். கூடுதல் விவரங்களுக்கு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் செயல்படுத்தப்படும் மதிசிறகுகள் தொழில் மைய அலுவலா் (93446 72756) தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.