நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் இளம் சாதனையாளா்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில், நாமக்கல் மாவட்டத்தைச் சோந்த தகுதியான மாணவ, மாணவியா்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து, எழுத்துத் தோவின் அடிப்படையில் உதவித்தொகை பெற்று பயன்பெறலாம்.
2023-20-24 ஆம் ஆண்டிற்கு, நாடு முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின பழங்குடியினா் ஆகிய பிரிவுகளைச் சோந்த 30 ஆயிரம் மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சாா்ந்த 3,093 மாணவ, மாணவியா்களுக்கு கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவா்களுக்கான தகுதிகளாக, பெற்றோா் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க வேண்டும்.
9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தோவு முகமை நடத்தும் நுழைவுத் தோவில் பெற்ற தகுதியின் அடிப்படையிலேயே தோவு செய்யப்படுவா்.
இத்தோவிற்கு ஆக.10-ஆம் தேதி-க்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆக.12 முதல் 16-ஆம் தேதி வரையில் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும். எழுத்துத் தோவு செப். 29-இல் நடைபெறும்.
விண்ணப்பத்துடன் கைப்பேசிஎண், ஆதாா் எண், ஆதாா் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை (அறை எண்.28) நேரிலோ அல்லது 04286-280193 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.