TAMIL MIXER
EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
EDUCATION.ன்
TNUSRB செய்திகள்
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு வாரியம் ஆனது கடந்த மே 23ம் தேதி அன்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 129 காலியிடங்கள் உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இப்பணிக்கு இந்திய குடியுரிமை பெற்ற 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், அரசு அங்கீகாரம் பெற்ற ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், TNUSRB வாரியம் தங்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை தற்போது வெளியிட்டுள்ளது.
தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகார்பூர்வ இணைப்பின் மூலம் வினாத்தாளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.