கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வரும், 14 முதல், குரூப் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடங்க உள்ளது.
பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆன்-லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் -1, குரூப் -2 தேர்விற்க்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.வரும், 14, காலை, 10:30 மணி முதல் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பயிற்சி நடக்கவுள்ளது.
கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இந்த இணைப்பின் https://rb.gy/6ei6u மூலம் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு 04343 291983 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.