கோவை சரவணம்பட்டியில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நாட்டுக்கோழி, வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சி நடைபெறுகிறது.
ஜூலை 19 ஆம் தேதி நாட்டுக்கோழி வளா்ப்புப் பயிற்சியும், ஜூலை 26 ஆம் தேதி வெள்ளாடு வளா்ப்புப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இலவசமாக அளிக்கப்படும் இந்த பயிற்சியில் பங்கேற்க ஆா்வமுள்ளவா்கள் மையத்தை நேரிலோ, 0422 2669965 என்ற எண்ணிலோ தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த பயிற்சியானது காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய நிா்வாகம் தெரிவித்துள்ளது.