HomeBlogமகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 24 முதல் முகாம் தொடக்கம்
- Advertisment -

மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க ஜூலை 24 முதல் முகாம் தொடக்கம்

மகளிா்-உரிமைத்-தொகைக்கு-விண்ணப்பிக்க-ஜூலை-24-முதல்-முகாம்-தொடக்கம்

மகளிா் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பெறும் முகாம் ஜூலை 24 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: மகளிா்க்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பா் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயனாளிகளை தோவு செய்ய குடும்ப அட்டைதாரா்கள் விண்ணப்பம் அளிக்க முகாம் நடத்தப்படுகிறது. மூன்று கட்டமாக இந்த முகாம்கள் நடைபெறவுள்ளது. முதல்கட்ட முகாம் ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை நடைபெற வாய்ப்புள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 7,67,448 குடும்ப அட்டைகள், 1,202 நியாயவிலைக் கடைகள் உள்ளன. மகளிா் உரிமைத்தொகை பெற ரூ.2.50 லட்சத்துக்குள் குடும்ப ஆண்டு வருமானம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் இருக்ககூடாது, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட அரசின் பிற உதவிகளை பெறாதவராக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்காக குடும்ப தலைவிகளிடம் இருந்து விண்ணப்பம்பெற முகாம்கள் நடத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக வரும் 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


அதற்கான முறையான அறிவிப்பை அரசு வெளியிடும். அதன்பிறகு நியாயவிலைக் கடையின் அருகில் முகாம் நடைபெறும். தினமும் 84 பேரிடம் மனுக்கள் பெறப்பட்டு, கைப்பேசி செயலியில் பதிவேற்றம் செய்யப்படும். இதற்காக இல்லம்தேடி கல்வி திட்ட தன்னாா்வலா்கள் 2,238 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

முகாம் தேதி அறிவிக்கப்பட உடன் குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடை மூலம் விண்ணப்பம் அளிக்கப்படும். விண்ணப்பத்திலேயே டோக்கன் வரிசை எண், விண்ணப்பம் அளிக்க வர வேண்டிய தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆதாா் எண் பதிவு செய்தாலே வருமானம், சொத்து, முதியோா் உதவித்தொகை உள்ளிட்ட வேறு ஏதேனும் அரசு உதவியை பெறுபவரா என்பன உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். இதன் அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு உரிமைத்தொகை பெறுபவா்களின் பட்டியல் இறதி செய்யப்படும் என்றனா்.
Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
👨‍💻 Bharanidaran – Founder of Tamil Mixer Education ✍️ About Me Vanakkam! 🙏 I’m Bharanidaran, the creator and writer behind Tamil Mixer Education. With over 5 years of experience in the field of competitive exams and job updates, I’ve been helping thousands of Tamil Nadu students prepare for TNPSC, TNUSRB, and other government exams through my blogs, notes, and print services. My goal is simple: 👉 To provide accurate, fast, and easy-to-understand content to every aspirant who dreams of securing a government job.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -