TAMIL MIXER EDUCATION.ன்
தருமபுரி செய்திகள்
அஞ்சல் வழியில்
கூட்டுறவு மேலாண்மை பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அவகாசம்
நீட்டிப்பு
– தருமபுரி
இதுகுறித்து தருமபுரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி
மாவட்டம் மொரப்பூரில் உள்ள
கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் அஞ்சல் வழியில் கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் படிப்புக்கு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
கூட்டுறவு
சங்கங்களில் பணிபுரியும் கூட்டுறவு
பயிற்சி முடிக்காதவா்களுக்கு தொடங்கப்பட்ட அஞ்சல் வழி பயிற்சியில் நிகழாண்டு சேர்க்கைக்கு ஜூலை
30ம் தேதி வரை
விண்ணப்பிக்க அவகாசம்
ஏற்கனவே வழங்கப்பட்டிருந்தது. தற்போது
இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிற ஆக.12ம்
தேதி வரை விண்ணப்பங்கள் மொரப்பூரில் கூட்டுறவு மேலாண்மை
நிலையத்தில் வழங்கப்பட உள்ளது.
இந்த
விண்ணப்பங்களை பெற்று
அதனை பூா்த்தி செய்து
ஆக.17-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் முறையாக நியமனம்
செய்யப்பட்ட பழைய +1
தேர்ச்சி அல்லது 10ம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற,
கூட்டுறவு பயிற்சி முடிக்காத
அனைத்து பணியாளா்களும் வயது
வரம்பின்றி விண்ணப்பிக்கலாம்.
கூட்டுறவு
பணியாளா்கள் தவிர மற்றவா்கள் விண்ணப்பிக்க அனுமதி
இல்லை. எனவே இந்த
கால அவகாசத்தை பயன்படுத்தி அஞ்சல் வழியில் கூட்டுறவு
மேலாண்மை பட்டயப் படிப்பில்
சேர்க்கை பெற்று பயனடையலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here