TAMIL MIXER
EDUCATION.ன்
சென்னை
செய்திகள்
பிற்படுத்தப்பட்ட
மாணவா்
விடுதிகளில்
சேர விண்ணப்பிக்கலாம் – சென்னை
சென்னை மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்ட,
மிகபிற்படுத்தப்பட்ட,
சிறுபான்மையின
மாணவ,
மாணவிகள்
விடுதிகளில்
சேர
ஜூன்
15க்குள்
விண்ணப்பிக்கலாம்
என
சென்னை
மாவட்ட
ஆட்சியா்
தெரிவித்துள்ளார்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாவட்டத்தில்
பிற்படுத்தப்பட்டோர்,
மிகப்பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினத்தை
சோந்த
மாணவா்களுக்கு
11 விடுதிகளும்,
மாணவிகளுக்கு
6 விடுதிகளுமாக
மொத்தம்
17 கல்லூரியுடன்
இணைந்த
விடுதிகள்
செயல்பட்டு
வருகின்றன.
பட்டப்படிப்பு,
பட்ட
மேற்படிப்பு
மற்றும்
பாலிடெக்னிக்
படிப்புகளில்
படிக்கும்
மாணவ,
மாணவிகள்
இந்த
விடுதிகளில்
சேரலாம்.
விண்ணப்பதாரா்கள்
பெற்றோரின்
ஆண்டு
வருமானம்
ரூ.2
லட்சத்துக்கு
மிகாமலும்,
இருப்பிடத்திலிருந்து
படிக்கும்
கல்வி
நிலையத்தின்
தொலைவு
குறைந்தபட்சம்
8 கி.மீ.க்கும் மேலும் இருக்க வேண்டும். இந்த தூர விதி மாணவிகளுக்கு
பொருந்தாது.
இங்கு உணவு, தங்கும் வசதி அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது.
தகுதியுடைய
மாணவ,
மாணவிகள்
தங்கள்
விண்ணப்பங்களை
சம்பந்தப்பட்ட
விடுதிகாப்பாளரிடமிருந்தோ
அல்லது
மாவட்ட
ஆட்சித்தலைவா்
அலுவலகத்தில்
உள்ள
மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர்
மற்றும்
சிறுபான்மையினா்
நல
அலுவலகத்திலிருந்தோ
இலவசமாக
பெற்று,
பூா்த்தி
செய்து
ஜூன்
15ம்
தேதிக்குள்
மீண்டும்
சமா்ப்பிக்கலாம்.
சாதி மற்றும் வருமான சான்றிதழ்களை
விண்ணப்பங்களுடன்
இணைக்கத்
தேவையில்லை.
விடுதியில்
சேரும்போது
ஒப்படைத்தால்
போதுமானது.
இதுமட்டுமின்றி
ஒவ்வொரு
விடுதியிலும்
இலங்கைத்தமிழா்களின்
குழந்தைகளுக்கு
5 இடங்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.