TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
சென்னை-‘அரசின் அகில இந்தியகுடிமைப் பணிகள் பயிற்சி மையம் நடத்தும்,மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்’ என, தலைமைச் செயலர் இறையன்பு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அரசால் நடத்தப்படும், அகில இந்தியகுடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில், அகில இந்திய குடிமைப் பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மைத் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சிகள் அளிக்கப் படுகின்றன.நடப்பு நிதியாண்டில்,முதன்மைத் தேர்வுக்கு படித்த 80 பேரில் 12 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இவர்களில் மூன்று பேர், தமிழை விருப்பப் பாடமாக தேர்வு செய்து தேர்ச்சி பெற்று உள்ளனர்.தற்போது, இந்த மையத்தில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு, மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதில், முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள, பிற தேர்வர்களும் பங்கேற்கலாம். கட்டணம் கிடையாது.தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விருப்பத்தை, alcscc.gov@gmail.com என்ற இ – மெயில் முகவரி; 94442 86657 என்ற ‘வாட்ஸ் ஆப்’ எண்; 044 – 24621909 என்ற தொலைபேசி எண் என, ஏதேனும் ஒன்றில் தொடர்பு கொண்டு, விபரங்களை தெரிவிக்கலாம்.
மாதிரி ஆளுமை தேர்வுக்கான தேதி குறித்த விபரங்கள், www.civilservicecoaching.com என்ற இணையதளத்தில் விரைவில் அறிவிக்கப்படும். ஆளுமைக் தேர்வுக்காக படித்து, டில்லி செல்ல தேர்வு செய்யப்படுவோருக்கு, பயணச் செலவுத் தொகையாக, 2,000 ரூபாய், இந்த மையத்தால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை கடந்த ஆண்டில் 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு இறையன்பு தெரிவித்துள்ளார். சென்னை-‘அரசின் அகில இந்தியகுடிமைப் பணிகள் பயிற்சி மையம் நடத்தும்,மாதிரி ஆளுமைத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விருப்பத்தை தெரிவிக்கலாம்’ என, தலைமைச் செயலர் இறையன்பு
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


