மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா். மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணைய தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க ஆட்சியா் க. கற்பகம் அழைப்பு விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் நடத்தப்பட்டு வருகிறது. பெண்கள் மற்றும் பட்டியலின மாணவா்களுக்கு தேர்வுக் கட்டணம் முற்றிலும் இலவசம்.
இம் மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் வேலைவாய்ப்பற்றோா் இத் தேர்வுக்கு ட் இணையதளத்தில் விண்ணப்பித்து, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டு வரும் இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்கலாம். இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் தங்களுடைய ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55913 என்னும் கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


