TAMIL MIXER
EDUCATION.ன்
உதவித்தொகை
செய்திகள்
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெற
விண்ணப்பிக்கலாம்
வேண்டும்
– அரியலூர்
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெற
விரும்புவோர்
இம்மாதம்
28ம்
தேதிக்குள்
விண்ணப்பிக்க
வேண்டும்
என்று
அரியலூர்
மாவட்ட
ஆட்சியர்
ரமண
சரஸ்வதி
தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெறுவதற்கு
பத்தாம்
வகுப்பு
கல்வித்தகுதி
தேர்ச்சி
பெறாத,
தேர்ச்சி
பெற்றவர்கள்,
பன்னிரண்டாம்
வகுப்பு
தேர்ச்சி
பெற்றவர்கள்,
பட்டபடிப்பு
தேர்ச்சி
பெற்ற
பொதுப்
பிரிவினர்
தங்களது
கல்வித்தகுதியை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
ஐந்து
ஆண்டுகள்
முடிவடைந்து
தொடர்ந்து
புதுப்பித்திருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளி
பதிவுதாரர்கள்
பத்தாம்
வகுப்பு
கல்வித்தகுதி
தேர்ச்சி
பெறாத,
தேர்ச்சி
பெற்றவர்கள்
முதல்
பட்டப்படிப்பு
தேர்ச்சி
பெற்றவர்கள்
வரை
தங்களது
கல்வித்தகுதியை
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
பதிவு
செய்து
ஓராண்டு
முடிவடைந்திருக்க
வேண்டும்.
31.12.2022
அன்று
தாழ்த்தப்பட்ட
மற்றும்
பழங்குடியின
வகுப்பினர்
45 வயதிற்குள்ளும்,
இதர
பிரிவினர்
40 வயதிற்குள்ளும்
இருக்க
வேண்டும்.
மாற்றுத்திறனாளி
மனுதாரர்களுக்கு
உச்ச
வயது
வரம்பு
எதுவும்
இல்லை.
விண்ணப்பதாரர்
எந்தவொரு
கல்வி
நிறுவனத்திலும்
கல்வி
பயிலுபவராக
இருத்தல்
கூடாது.
ஆனால்,
தொலைதூர
கல்வி
பயிலுபவராக
இருக்கலாம்.
குடும்ப
ஆண்டு
வருமானம்
ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளி
மனுதாரர்களுக்கு
வருமான
உச்ச
வரம்பு
ஏதும்
இல்லை.
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
திட்டத்திற்குரிய
விண்ணப்ப
படிவத்தினை
அலுவலக
வேலை
நாட்களில்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலக
அடையாள
அட்டையுடன்
நேரில்
வந்து
இலவசமாக
பெற்றுகொள்ளலாம்
அல்லது
https://tnvelaivaaippu.gov.in/download.html
என்ற
இணையதளத்திலிருந்து
பதிவிறக்கம்
செய்து
கொள்ளலாம்.
இத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களும் மேற்படி இணையதளத்தில்
தெளிவாக
குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர்த்தி
செய்யப்பட்ட
விண்ணப்பங்களை
28.02.2022க்குள்
அனைத்து
அசல்
கல்விசான்றுகள்
மற்றும்
மாவட்ட
வேலைவாய்ப்பு
அலுவலக
அடையாள
அட்டை,
குடும்ப
அட்டை,
ஆதார்
அட்டை
மற்றும்
வங்கி
கணக்கு
புத்தகத்துடனும்,
மாற்றுத்திறனாளிகளை
பொறுத்தவரையில்
மேற்படி
சான்றுகளுடன்
மாற்றுதிறனாளிகளுக்கான
தேசிய
அடையாள
அட்டையுடனும்
நேரில்
வருகைபுரிந்து
விண்ணப்ப
படிவத்தினை
சமர்ப்பிக்குமாறு
கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெற்று
மூன்றாண்டு
முடிவுற்ற
பொதுபிரிவினரும்
பத்தாண்டுகள்
முடிவுற்ற
மாற்றுத்திறனாளிகளும்
ஏற்கனவே,
வேலைவாய்ப்பற்றோர்
உதவித்தொகை
பெற்று
வருபவர்களும்
மீண்டும்
விண்ணப்பிக்க
வேண்டியதில்லை.
தற்போது உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் சுய உறுதிமொழி ஆவணத்தினை பூர்த்தி செய்து மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகத்தில்
சமர்ப்பிக்க
வேண்டும்.