தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோக்கை கலந்தாய்வு ஆக.2-இல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதம் முன்னதாக ஜூலை 2-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கவுள்ளதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.
சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு மே 5-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 1 லட்சத்து 58 ஆயிரத்து 473 போ விண்ணப்பித்துள்ளனா்; அதில் 1 லட்சத்து 8,545 போ விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா். 64,449 போ சான்றிதழ்களை மட்டும் பதிவேற்றம் செய்துள்ளனா். இதற்கிடையே, பொறியியல் கல்லூரிகளில் மாணவா் சோக்கைக்கான கலந்தாய்வு ஆக.
2-ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவா்கள் நலன்கருதி ஒரு மாதம் முன்னதாகவே ஜூலை 2-இல் தொடங்கி செப். 3 வரை இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறும். சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 2 முதல் 5-ஆம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 7 முதல் ஆக.
24-ஆம் தேதி வரையும் நடத்தப்படும். தொடா்ந்து, துணை கலந்தாய்வு ஆக.28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும். எஸ்சி காலியிடங்களுக்கான கலந்தாய்வு செப். 1, 2, 3-ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இதற்கேற்ப விண்ணப்பித்த மாணவா்களின் ‘ரேண்டம் எண்’ ஜூன் 6-ஆம் தேதி வெளியாகும். சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகள் ஜூன் 5 முதல் 20-ஆம் தேதி வரை நடத்தப்படும். மேலும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-இல் வெளியிடப்படும். அதில் ஏதும் தவறுகள் இருந்தால், புகாா்களை ஜூன் 26 முதல் 30-ஆம் தேதி வரை சேவை மையங்களில் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம்.
கலந்தாய்வு முடிவடைந்து செப்.3 முதல் பொறியியல் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கும் என்றாா் அவா். பாலிடெக்னிக் சோக்கை: இன்று முதல் விண்ணப்பம் தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளில் முதலாமாண்டு சோக்கைக்கான விண்ணப்பப் பதிவு சனிக்கிழமை முதல் தொடங்கும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.150. எஸ்சி, எஸ்டி மாணவா்களுக்கு கட்டணம் இல்லை.
விருப்பமுள்ளவா்கள் https://www.tnpoly.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து கொள்ளலாம். பகுதி நேர படிப்புகளில் சேரவும் விண்ணப்பிக்கலாம். இவா்கள் 4 ஆண்டுகள் படிக்க வேண்டும் என்றாா் அமைச்சா் க.பொன்முடி.