Saturday, August 9, 2025

சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வுக்கு மனிதநேய மையம் இணையவழி இலவச பயிற்சி

 சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வுக்கு மனிதநேய மையம் இணையவழி இலவச பயிற்சி

சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையம் சார்பில் சிவில் சர்வீசஸ் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்று அறக்கட்டளை நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியை தலைமையாக கொண்டு, மனிதநேயம் ஐ.ஏ.எஸ். கட்டணமில்லா கல்வியகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை சேர்ந்த அனைத்து தரப்பு மாணவ–மாணவிகளும் இந்திய அளவில் உயர் பதவிகளான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றிற்கு தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.

அதேபோல், அகில இந்திய அளவில் இதுவரை எந்த கல்வி நிறுவனமும் செய்யாத, ஒரு சாதனையாக பொதிகை தொலைக்காட்சி மூலம் சிவில் சர்வீசஸ் தேர்வின் முதல்நிலை தேர்வு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழிக்கல்வி இலவசமாக ஒளிபரப்பப்பட்டது.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்பட 26 வகையான பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. இந்த பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத்தேர்வு ஆகிய 3 கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஜனவரி மாதம் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டது.

மேலும் முதன்மைத் தேர்வில் கலந்து கொண்ட மாணவ–மாணவிகளுக்கு மனிதநேய இலவச பயிற்சி மையம் சார்பில் இலவச பயிற்சியும் வழங்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், அவர்கள் தங்குவதற்கு விடுதி, உணவு உள்பட அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்பட்டது.

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கு நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி மனிதநேய இலவச பயிற்சி மையத்தில் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட இருக்கிறது. மனிதநேயத்தில் நேர்முகத்தேர்வுக்கு பயிற்சி பெற்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத்தேர்வுக்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் புதிய உடை, டெல்லி செல்ல விமான பயணச்சீட்டு, தங்கும் வசதி, உணவு மற்றும் திரும்பிவர பயணச்சீட்டு அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

தொடர்ந்து 7 ஆண்டுகளாக மனிதநேய மாணவர்கள்தான் நேர்முகத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ–மாணவிகள் சமீபத்தில் எடுக்கப்பட்ட தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மைத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆகியவற்றுடன் வருகிற 25ந்தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) manidhanaeyam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், 044–24358373, 24330095, 8428431107 என்ற எண்ணிலும் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யும் அனைவருக்கும் வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) முதல் நேர்முகத் தேர்வு பயிற்சியில் உங்களுடன் உரையாட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். போன்ற அரசு உயர் அதிகாரிகளை கொண்டு ‘ஜூம் மீட்டிங்’ நடத்தப்படும்.

மேற்கண்ட தகவல்களை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

Important Notes

6-12th பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு PDF

TNPSC, SSC, மற்றும் அரசு தேர்வுகளுக்கான "பாரதிதாசன் பற்றிய அனைத்து தொகுப்பு...

TRB MATHS UNIT 1 TO 10 STUDY MATERIAL 2025 (GOVERNMENT OF TAMILNADU)

TRB Maths Study Material for Units 1 to 10...

இலக்கியம் – பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள்

இலக்கியம் - பதினெண் மேற்கணக்கு நூல்கள் முங்கிய வினா விடைகள் TNPSC மற்றும்...

TNPSC Group 4 Official Answer Key 2025

TNPSC Group 4 Official Answer Key 2025

தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு

வேலுநாச்சியார் (1730 - 1796):தில்லையாடி வள்ளியம்மை:பத்மாசனி அம்மாள்:கேப்டன் இலட்சுமி:டி.எஸ்‌.சௌந்திரம்:ருக்மணி லட்சுமிபதி:மூவலூர் இராமாமிர்தம்...

Topics

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு 9 காலியிடங்கள்! 🏭📄

தமிழ்நாடு செய்திதிதாள் காகித ஆலை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 – DGM, AM & Officer பணிக்கு B.Sc, BE/B.Tech, CA/CMA, M.Sc தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹31,100 – ₹1,81,500. கடைசி தேதி: 20.08.2025.

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு 417 காலியிடங்கள்! 💼📈

பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2025 – Officer & Manager பணிக்கு Any Degree, B.Sc, BE/B.Tech, MBA, PG Diploma தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹48,480 – ₹93,960. கடைசி தேதி: 26.08.2025.

இந்திய தகவல், வடிவமைப்பு & உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு விண்ணப்பிக்கலாம்! 🎓💼

இந்திய தகவல், வடிவமைப்பு மற்றும் உற்பத்தி தொழில்நுட்பக் கழகம் வேலைவாய்ப்பு 2025 – Junior Research Fellow பணிக்கு BE/B.Tech, ME/M.Tech தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹37,000. கடைசி தேதி: 21.08.2025.

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகள்! 💼📚

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Project Scientist & Project Assistant பணிகளுக்கு B.Com, B.Sc, BA, BBA, PhD தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹24,000 – ₹60,000. கடைசி தேதி: 11.08.2025.

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பணிக்கு ரூ.15,000 சம்பளம்! 🍌📋

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB) வேலைவாய்ப்பு 2025 – Office Assistant பதவிக்கு B.Sc தகுதியானவர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 16.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பணிக்கு ரூ.15,000 மாத சம்பளம்! 🎓📰

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Guest Faculty பதவிக்கு MA தகுதியானவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000. கடைசி தேதி 13.08.2025.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts பணிக்கு ரூ.25,000 வரை சம்பளம்! 📚🎓

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு 2025 – Subject Experts/Professionals பதவிக்கு M.Sc, PhD தகுதியானவர்கள் Walk-in-Interview மூலம் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹15,000 – ₹25,000.

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பணிக்கு ரூ.27,000 சம்பளத்தில் விண்ணப்பிக்கவும்! 🔬🎓

IIT Madras வேலைவாய்ப்பு 2025 – Project Assistant பதவிக்கு B.Sc தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹27,000. கடைசி தேதி: 29.08.2025. ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

Related Articles

Popular Categories