Home Blog நலத் திட்டங்களைப் பெற இ-சேவை மூலம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

நலத் திட்டங்களைப் பெற இ-சேவை மூலம் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

0

நலத்-திட்டங்களைப்-பெற-இ-சேவை-மூலம்-மாற்றுத்திறனாளிகள்-விண்ணப்பிக்கலாம்

மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை”தளம் வழியாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று மாவட்ட ஆட்சியா் கிராந்தி குமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கோவை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு இ-சேவை”தளம் வழியாக மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர உதவித் தொகை ஆகிய 5 திட்டங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தளம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவைகளைப் பொதுமக்கள் பயன்படுத்த தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை மாத இறுதி வரை இ-சேவை மூலமாகவும், நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து விண்ணப்பங்களும் இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பித்து மாற்றுத் திறனாளிகள் பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version