11ம் வகுப்பு
மாணவர்களுக்கு விரைவில்
மிதிவண்டி– தமிழ்நாடு அரசு
11ம்
வகுப்பு மாணவர்களுக்கு 3 மாத
காலத்திற்குள் மிதிவண்டி
அளிக்கப்படும் என
தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:
2021-2022ம்
கல்வி ஆண்டிற்கான மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ்
அரசு பள்ளிகள், அரசு
உதவிப்பெறும் மற்றும்
பகுதியாக நிதியுதவி பெறும்
பள்ளிகளில் 11ம் வகுப்பு
பயிலும் அனைத்து வகுப்பைச்
சார்ந்த மாணவ, மாணவியர்கள், வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறையின் கீழ்
தொழிற்பயிற்சி (ITI) பயிலும்
மாணவ, மாணவியர்கள் ஆகியோருக்கான 6,18,101 மிதிவண்டிகள் கொள்முதல்
செய்ய கடந்த மார்ச்
3ம் தேதி ஒப்பந்த
அறிவிக்கை வெளியிடப்பட்டது.
ஒப்பந்தத்தில் தகுதியான மிதிவண்டிகள் உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஒப்பந்தத்தில் கலந்து
கொண்ட தகுதியான நிறுவனங்களின் விலைப் புள்ளிகள் திறக்கப்பட்டு, கொள்முதல் குழு மூலம்
விலை குறைப்பு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.