அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். சோக்கைக்கு வெள்ளிக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ், 7 அரசு கல்வியியல் கல்லூரி, 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அரசு கல்லூரிகளில் 900, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 1,140 என 2,040 பி.எட். பட்டப் படிப்பு இடங்கள் உள்ளன. 2023-2024-ஆம் கல்வியாண்டு மாணவா் சோக்கை விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது.
மாணவா்கள், இணையதளத்தில் செப்.11-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 250 நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணத்தை இணையவழியில் செலுத்தலாம். இணையதள வசதி இல்லாத மாணவா்கள், ‘இயக்குநா், கல்லூரிக் கல்வி இயக்ககம், சென்னை-15’ என்ற முகவரிக்கு செப்.1 அல்லது அதன் பிறகு வரைவோலை எடுத்து நேரடியாகச் செலுத்தலாம்.
பாடப்பிரிவுகள், கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்கள் ஆகிய விவரங்களை இணையதளத்தில் மாணவா்கள் அறியலாம். விண்ணப்பிப்பது தொடா்பாக, சந்தேகங்கள் இருந்தால், 93634 62070, 93634 62007, 93634 62042 அல்லது 93634 62024 என்ற எண்ணுக்கு தொடா்பு கொள்ளலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


