தொழிலாளர் கல்வி
நிலையத்தில் செப். 1 வரை
விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
தொழிலாளர்
கல்வி நிலையத்தில் எம்.ஏ.
தொழிலாளர் மேலாண்மை மற்றும்
தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை
மாலை நேர பட்டப்
படிப்பு (பி.ஜி.டி.எல்.ஏ.),
தொழிலாளர் சட்டங்களும், நிர்வாகவியல் சட்டமும் (டி.எல்.எல்.)
ஆகிய படிப்புகளுக்கான மாணவர்
சேர்க்கை தற்போது நடைபெற்று
வருகிறது.
அதன்படி,
ஏதேனும் ஒரு பட்டப்
படிப்பு முடித்த மாணவர்கள்,
இதற்கான விண்ணப்பங்களைப் பெற
tilschennai@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலம்,
பெயர், தொலைபேசி எண்,
முகவரி மற்றும் மின்னஞ்சல் விவரங்களை அனுப்பவேண்டும். பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும்
செப். 1-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல்
விவரங்களை 044 – 29567885 / 29567886 என்ற
தொலைபேசி எண்ணில் தெரிந்து
கொள்ளலாம்.
தொழிலாளர்
கல்வி நிலையத்தில் உள்ள
எம்.ஏ., பி.ஜி.டி.எல்.ஏ.,
டி.எல்.எல்
பட்டயப் படிப்புகள், தொழிலாளர்
நல அலுவலர் பதவிக்கு
பிரத்யேக கல்வித் தகுதியாக
வரையறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.