சி.எம்.டி.ஏ.,வில்
தொழில் பழகுனர் பயிற்சி
சென்னை
பெருநகர் வளர்ச்சி குழுமமான,
சி.எம்.டி.ஏ.,
சார்பில், தொழில் கல்வி
பட்டதாரிகளுக்கு ஊக்க
தொகையுடன் தொழில் பழகுனர்
பயிற்சி வழங்கப்படுகிறது.
இதன்படி,
நகரமைப்பு துறையில் இளநிலை
பட்டப்படிப்பு முடித்த,
20 பேர், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த, 20 பேர் என
ஆண்டுக்கு, 40 பேருக்கு தொழில்
பழகுனர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்காக முறையே,
8,000 ரூபாய், 10 ஆயிரம் ரூபாய்
ஊக்கத் தொகை, இரண்டு
மாதங்களுக்கு வழங்கப்படும்.
இந்நிலையில், மத்திய அரசின் புதிய
வழிகாட்டுதல் அடிப்படையில், கட்டட வடிவமைப்பாளர், நகரமைப்பு
திட்டமிடல், கட்டுமான பொறியியல்
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு முறையே, 15 ஆயிரம்,
12 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய்
ஊக்கத்தொகை வழங்கப்படும். எட்டு
வாரங்கள் முதல், ஓராண்டு
வரை இந்த பயிற்சி
வழங்கப்பட உள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


