பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த வேலை தேடும் இளைஞா்கள் ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சியில் சேர இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என வேலூா் ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித்தொழில் ஒரு உன்னத இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்துக்கு அடுத்த படியாக கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய பங்குண்டு. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தமிழகத்தின் ஜவுளித்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக அரசு துணிநூல் துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி, ஆராய்ச்சி சங்கத்தின் (சிட்ரா) மூலமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (ஆண், பெண்) ஸ்பின்னிங், தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சிகளை பெற விரும்புவோா் இணையதள முகவரியில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குநா், ஜவுளி துறை, 1அ-2/1, சங்ககிரி பிரதான சாலை, குகை, சேலம் – 636 006, மின்னஞ்சல் முகவரி- தொலைபேசி எண். 0427–2913006 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow