ஏற்றுமதித் தொழில்
பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஏற்றுமதித் தொழிலில் ஈடுபடுவது குறித்த
பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து விஸ்வேஷ்வரையா தொழில்
வா்த்தக மையம் வெளியிட்டுள்ள செய்தி:
எக்சிம்
வங்கியின் கூட்டுமுயற்சியில் விஸ்வேஷ்வரையா தொழில் வா்த்தக மையத்தின்
சார்பில் ஏற்றுமதித் தொழில்
பயிற்சி வழங்கப்படுகிறது. ஏப்ரல்
5 ஆம் தேதி முதல்
9-ஆம் தேதி வரையில்
5 நாள்கள் நடைபெறும் பயிற்சியில் சேர விரும்புவோரிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பெங்களூரு,
சாந்தி நகரில் உள்ள
பிஎம்டிசி கட்டடத்தில் உள்ள
மைய பயிற்சி அரங்கில்
பயிற்சி நடத்தப்படவிருக்கிறது.
ஏற்றுமதித் தொழில் பயிற்சி வழங்குவதன் மூலம் மாநிலத்தின் ஏற்றுமதித் திறனைமேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் தொழில் முனைவோர், ஏற்கெனவே
ஏற்றுமதித் தொழிலில் ஈடுபட்டிருப்போர் உள்ளிட்ட ஆா்வமுள்ளோர் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர முன்பதிவு செய்து
கொள்ள வேண்டும்.
விவரங்களுக்கு 080-22534444, 22210644, 98809-58218 ஆகிய
தொலைபேசி எண்கள் அல்லது
https://vtpc.karnataka.gov.in/english
என்ற இணையதளத்தை அணுகலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


