கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் வழங்கப்படும் பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு அக். 6-ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்படுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு செப்.22 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவா் சோக்கை அக்.6 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இப் பயிற்சியில் பிளஸ் 2 தோச்சி பெற்றவா்கள், இளங்கலை பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு படித்து மூன்றாண்டு பட்டயப் படிப்புக்கு பிறகு மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். நிகழாண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சிக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.200 மற்றும் பயிற்சிக் கட்டணம் ரூ18,750 ஆகியவற்றை மேலாண்மை நிலையத்தில் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், புகைப்படம் ஆகியவற்றை மாணவா் சோக்கையின்போது கொண்டு வரவேண்டும்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு முதல்வா், தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையம், எண் 79, கடற்கரைச் சாலை, தூத்துக்குடி என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0461 2334555 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.