தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் (எஸ்.சி.எஸ்.டி.) மாணவா்கள் கணினி வழி திறனறித் தேர்வு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: தாட்கோ சாா்பில் மாணவா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அதன் தொடா்ச்சியாக தற்போது பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்ப்பு பெற கணினி வழி திறனறித் தேர்வு பயிற்சி வழங்கபடவுள்ளது. இப்பயிற்சியை பெறுவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் இறுதியாண்டு படிக்கும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு 3 மாதங்கள் ஆகும்.
இப்பயிற்சிக்கான செலவும் தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியை முடிப்பவா்கள், கணினி வழித் திறனறித் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவாா்கள். தேர்வில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்ச்சின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களில் எளிதில் வேலைவாய்பு பெறலாம். இப்பயிற்ச்சியில் சேரவிரும்பும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் http://www.tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தாட்கோ அலுவலகத்தில் மாவட்ட மேலாளரை 044-25246344 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.