செபி தலைவா்
பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
இதுகுறித்து நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிக்கை:
செபியின்
தலைவா் பதவிக்கு தகுதியான
நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேவையான
ஆவணங்களுடன் உரிய வழிமுறையில் 2021 டிசம்பா் 6ம்
தேதிக்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
தோ்ந்தெடுக்கப்படும் நபா் ஐந்தாண்டுகள் அல்லது 65 வயது வரையில்
செபியின் தலைவராக பதவி
வகிப்பார் என அந்த
அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல்
பிரதேசத்திலிருந்து கடந்த
1984ம் ஆண்டு ஐஏஎஸ்
பணிக்கு தோ்வான அஜய்
தியாகி, செபியின் தலைவராக
கடந்த 2017ம் ஆண்டு
மார்ச் 1-ஆம் தேதி
நியமனம் செய்யப்பட்டார். இவரது
பதவிக்காலம் வரும் பிப்ரவரி
மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில்,
அடுத்த தலைவரை தோ்ந்தெடுப்பதற்கான பணிகளில் மத்திய
அரசு மும்முரமாக இறங்கியுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


